சமூக மாற்றத்தை நோக்கி...

Tuesday, November 29, 2011

இஸ்லாமிய இயக்கங்கள்


அல்லாஹ் மனிதனை ஓரே ஆண் பெண்னிலிருந்தே படைத்துள்ளான். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை முடிந்தளவு பின்பற்றியும் விலக்கள்களை முலுமையாக தவிர்ந்தும் வாழுமாறும் கட்டளையிட்டான். இவர்களுக்கு வழிகாட்ட 124000 நபிமார்களை (ஒரு ஹதீஸில் 224000 நபிமார்களை) அனுப்பிவைத்தான். அல்லாஹ் அல்குராஆனில் கூறும் போது "அவர்கள் அனைவரும் லாஇலாக இல்லல்லாஹ்" என்ற ஒன்றையே போதித்ததாகவும் அவ்வாறே அந்த நபிமார்களிடையே எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் குறிப்பிடுகின்றான்.

எனினும் இந்த நபிமார்களது உம்மத் பல பிரிவுகளாக பிரிந்து சென்றுள்ளனர். அவர்களிலும் குறிப்பாக முஹம்மத் ரசூல் (ஸல்) அவர்களது உம்மா நபிகளாரே குறிப்பிட்டதுக்கு இணங்க 73 ஆகப்பிரிந்துள்ளது. அது அவ்வாறு இருக்க அவர்களில் காணப்படும் 'சுன்னத் வல் ஜமாஆத்' ஐ எடுத்துக்கொண்டால் அவர்களும் பல மத்ஹப்களாகவும், பல இயக்கங்களாகவும், பல கட்சிகளாகவும், பல இனங்களாகவும் பிரிந்து காணப்படுகின்றனர். இத்தகையா பிரிவுகளை நாம் பலபோது சரிகாணலாம், காரணம், அவற்றினது நோக்கம், காலசூழ்நிளைகளிளைகளினால்.

உதாரணமாக; 
மதஹப்களை நோக்கினால் - ஒவ்வொரு மத்ஹபுடைய இமாம்களும் தமது காலத்தில் ஸ்லாம் பலவீணப்பட்டிருந்த போது அன்றைய சமூகத்தை வழிகாட்டி ஸ்லாத்தின் கீழ் வைத்திருப்பதற்கு அவரகளுக்குத் தேவையான சட்டவிடயங்களை தமக்குத் தெரிந்த குராஆனிய, ஹதீஸ் களின் நிழலில் போதித்தும், புதிய பிரச்சினைகளுக்கு இஜ்திகாத் மூலமாக தீர்வுகளைக் கொடுத்தும் சமூகத்தைப் பாதுகாத்து வந்தனர். பிட்பட்ட காலங்களில் அந்த இமாமினது சட்டங்கள் அவர்களது மாணவர்களினால் தொகுக்கப்பட்டு அவற்றைக்கொண்டு அந்த மாணவர்கள் சமூகத்துக்கு தீர்வுகளை சொல்ல நாளடைவில் அது பின்பற்றத்தக்க ஒரு பாதுகாப்பான வழிமுறையாகி அதனைக்கொண்டு தமது மார்க்கவிடயங்களை செயட்படுத்தி வந்தனர்.

இவ்வாறு பல இமாம்களது மாணவர்கள் அவரவர் ஆசிரியரது சட்டங்களை தொகுத்தபோது அவை ஷாபி, ஹனபி, மாலிக், ஹம்பலி, ழாஹிரி....... என பல நூறு மத்ஹப்களாக மாரி அதில் பல காலப்போக்கில் இல்லாமல் போக ஒரு சில இன்று வரை காணப்படுகின்றன. எனினும் இந்த மத்ஹப்பளில் கணப்படும் பல விடயங்கள் ஸ்லாத்துக்கு முறனானவைகளாகவும், ஆதாரம் அற்றவைகளாகவும் உள்ளன என்று பலர் குறை கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டு நியாயமானது. எனினும் இக்கிற்றச்சாட்டுக்களுக்கு அந்த இமாம்கள் பொருப்பானவர்கள அல்லர். ஏனெனில் இந்த விடயங்கள் அவர்களது சீடர்களால் புகுத்தப்பட்டவைகளாகும். எனினும் அந்த பிழைகள் தெறிந்தும் குறிப்பிட்ட மத்ஹபை பின்பற்றுபவர்கள் அவற்றை கவனிக்காதது மிகப்பெரும் தவறாகும்.

இயக்கங்களை நோக்கினால்
குலபாக்களினது ஆட்சிக்கு பின்னால் ஸ்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதன்போது நாளடைவில் ஸ்லாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது அல்லது பள்ளிக்குல் மாத்திரம் மற்றும் சில சடங்கு சம்பிரதாயங்களில் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக மாரியது. இது தொடர்ந்து கி.பி. 1924 இல் பெயரளவு கிலாஃபத்தும் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் ஸ்லாம் திக்குத் தெரியாமல் வீசிஎறியப்பட்டது. இதன் ஆரம்ப கட்டமான கி.பி. 1000 களுக்கு பின்னர் அரபுநாடுகளில் சிலைவணக்கம், ஷிர்க்கான விடங்கள் மழிந்து காணப்பட்டது இதனை எதிர்கொள்ள இமாம் தகியுத்தீன் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் போராடினார்கள். இதனை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் புரட்சியாகவே குறிப்பிடுகிறார். அதனை அடுத்து கி.பி. 1750 களுக்கு பின்னர் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஒரு போரட்டத்தைக் கொண்டுசென்றார்கள்.

இந்த போராட்டங்களின் விளைவாக மேற்கத்தேயா ஸ்லாமிய எதிர்ப்பு வரலாற்று ஆசிரியர்களினால் 'வஹ்ஹாபிகள்' எனப்படும் அரபுலக ஸலபிய சிந்தனை கொண்டவர்கள் தோற்றம் பெற்றார்கள். அவர்களது சிந்தனைகளால் கவர்ப்பட்ட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தௌஹீத் ஜமாஆத் தோற்றம் பெற்றது. இந்த ஜமாஆத் பல அரிய சேவைகளை செய்துள்ளன குறிப்பாக ஷிர்க்குகளுக்கு எதிராக பகிரங்க போர்க்கொடிதூக்கியவர்களாக இவர்களை சந்தேகமின்ரி சொல்லலாம். அதே போன்று மார்க்கத்தில் நுழைந்த (பித்அத்) புதியன வற்றை தக்கசான்றுகளுடன் நிறூபித்துக் காட்டினர். இதனால் சமூகத்தில் பல அசம்பாவிதங்கள் தோன்றியது உண்மையாயினும் ஷிர்க், பித்அத் களையப்பட வேண்டும் என்ற ரீதியில் அது தவிர்க்க முடியாதது என்றும் அவர்கள் கருதினர். இதனால் பல ஷிர்க்கான, பித்அத்தான விடயங்களில் இருந்து மக்கள் புரிந்து விலகிக்கொண்டனர்.

ஆனாலும் எல்லோருக்கும் இருப்பது போன்று இவர்களுக்கும் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சத்தியத்தை சொல்வதில் நிதானத்தை இழந்து செயட்படுகின்றனர். ஏனெனில் தௌஹீத் ஜாமாஆத் செயற்படும் எல்லா இடங்களிலும் சமூகத்துடன் மோதல் எற்படுகின்றது. ஒரு தவறை தடுக்கும், கண்டிக்கும் ஒழுங்கு இவர்களிடம் போனப்படுவதில்லை, தவறையே மார்க்கம் என்று கருதி அல்லது அரசியல் பின்னனியுடன் செயல்படும் ஒருவரை அல்லது சமூகத்தை ஒரு இரவில் மாற்றிவிட முடியாது, இது காய்ந்து வலைந்த குச்சியை நிமித்த முயலுவது போன்றதாகும் என்பதனை பலர் சுட்டிக்காட்டுவர்.

அவ்வாறே மற்றுமோரு குற்றச்சாட்டு இவர்கள் தமது கொள்கையுடன் ஒத்துப்போகாத அனைவரையும் பித்அத் வாதியகளாகவும், வழிகேடர்களாகவும், காபீர்களாகவும் காட்ட முனைகின்றனர் என்பது. இதில் சில உண்மைகள் இருப்பது தெரிகிறது. ஏனெனில் தௌஹீத் ஜமாஆத்தின் உருவாக்கப் பின்னனி அப்படியானது. அது தவறு என்று காணும் ஒன்றை நேருக்கு நேர் சந்திக்கும் பண்புகொண்டது. நேருக்கு நேர் எதிர்க்கும் தன்மை கொண்டது. காரணம் அது மார்க்கத்தில் தூய்மையை பேணவிரும்புகிறது. உண்மையில் ஸ்லாமிய இயக்கம், ஸ்லாத்தை பாதுகாக்கும் காவலர்களின் பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது ஷாபி இமாம் அவர்களின் ஒரு கூற்றை மனதிற்கொள்வதுவும் சிறந்தது "எனது கருத்து சரியானது; அது பிழையாகவும் இருக்கலாம். பிரருடைய கருத்து பிழையானது; அது சரியாகவும் இருக்கலாம்" என்பது.

மற்றுமொரு பிரதான குற்றச்சாட்டு இவர்கள் சுன்னத்தான விடயங்களுக்கு அல்லது இரண்டு கருத்துகளுக்கு இடம்பாடான விடயங்களில் தமது ஒரு கருத்தை தினிக்க முற்படுகின்றனர் அல்லது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றனர் என்கிற அம்சம். இது நாம் காணுகின்ற ஒரு விடயமாகும். இதில் இவர்கள கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

இவர்கள் தொடர்பான மற்றிமொரு குற்றச்சாட்டு இவர்கள் அல்குர்ஆனையும், நபி வழியையும் மாத்திரம் பின்பற்றுவேம் என்ற கோசம். இது தொடர்பில் விமர்சகர்கள் கருத்து சொல்லும் போது, தப்லீஹ் ஜமாஆத்தினரது (தப்லீஹ் ஜமாஆத் - இவர்கள் பற்றிய விடயங்கள் பின்னர் தரப்படும்) கோசமான 'அல்லாஹ்வின் கட்டளை நபிகளாரின் வழிமுறை' என்று அவர்கள் தமது சில குறிப்பிட்ட விடயங்களுக்கு சொலதுபோல், தௌஹீத் ஜமாஆத்தினரும் தமக்கு சார்பான அல்லது தான் பின்பற்றும் கொள்கையுடன் தொடர்பான விடயங்களை பின்பற்றுவதை மாத்திரமே இவர்கள் அல்குர்ஆன், நபி வழி எம்று கூறுகின்றனர் என்பர். இக்குற்றச்சாட்டுக்கு இவர்கள் இலக்காவதற்கு முக்கிய காரணம். சில அல்குர்ஆன், நபி வழிகளை இவர்கள் மற்ற விடயங்கள் அளவுக்கு பேசாமையும் அவ்விடயங்களுல் காட்டும் அசிரத்தையுமாகும்.

உதாரணமாக
1. நபிகளார் 11 திருமணங்களை செய்தார்கள் (சில அரிவிப்புக்களில் 13) எப்படியோ ஒன்றுக்கு மேற்பட்டது. குராஆனும் முதலாவது இரண்டு திருமணங்களை பற்றியே பேசுகிறது. ஆனால் அவர்களிமல் அப்படி அனைவரும் அல்லது பெரும்பான்மையாகவாவது குறைந்தது இரண்டு திருமணங்களை செய்தவர்களை காணமுடியாது. அந்த சுன்னாவை பற்றி அவர்கள் கதைப்பதும் மிகக்குறைவு.
2. மதுவை தடை செய்யும் குராஆன் அதற்கு கட்டம் கட்டமாக குராஆன் வசனங்களை இறக்கியே தடை செய்தது, முழுக் குராஆனும் இறங்கி குடிவுபெர 23 வருடங்கள் எடுத்தன. அவ்வாறே சிலைகள் கஃபாவில் இருக்கும் போதே நபிகளார் அவர்கள் அதில் தொழுதிருகிறார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் தனது சமூகம் மாட்டை வணங்குவதை ஷிர்க் என்று கருதியும் பார்த்துக் கொண்டிருந்தை அல்குராஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது எனினும் இவர்களிடம் தவறை திருத்துவதில் இந்த அல்குர்ஆன் நபிவழியும் பேனப்படுவதில்லை.
3. நபிகளார் அவர்கள் ஸ்லாமிய அரசை உருவாக்கி அதன் முதலாவது ஜனாதிபதியாகவும் இருந்தார்கள், தொடர்ந்து ஸஹாபாக்கள் கலீஃபாக்களாக இருந்தார்கள் இந்த நடைமுறையயும் இவர்கள் பேசுவதுல்லை இது குறித்து பேசும் ஜமாஆத்கள் (குறிப்பாக உலக அரங்கில் இஹ்வானுல் முஸ்லிமூன் மற்றும் இலங்கை, இந்தியா நாடுகளில் ஜமாஆத் இ ஸ்லாமி - இவர்கள் பற்றிய குறிப்புக்கள் பின்னர் தரப்படும்) இவர்களது வினர்சனங்களுக்கு உள்ளாகின்றன. ஸ்லாமிய அரசு என்கிற அம்சம் இவ்வளவு தெளிவாக இருந்தும் ஸ்லாமிய கிலாபத் 1924 வரை பெயரலவிலாவது இருந்தும் ஸ்லாத்தை நிலை நாட்டுவதில் இந்த நபிவழி பேனப்படுவதில்லை.
4. அறிஞ்சர்களை விமர்சித்தல் நபிகளார் (ஸல்) அவர்கள் காபீர்களின் கடவுல்களை கூட ஏசவேண்டாம் என்று சொல்லி இருக்கும் போது இவர்கள் தமது கொள்கைக்கு மாற்றமானவர்களை அல்லது மாற்றமாக கருத்து செல்பவர்களை கரசாரமாக தூற்றுகின்றனர். இதனால் ஸ்லாமிய பண்பாடுகளை அப்பட்டமாக உடைக்கின்றனர். அவர்களது குறைகளை சமூகத்தில் அனைத்து இடங்களிலும் சொல்லி அந்த அறிஞ்சரது மானத்தையும், கௌரவத்தையும் அழிக்க முயலுகின்றனர். உலகில் மிகப் பெரிய அறிஞ்சர்களை அந்த இயக்க ஆர்ப்பகட்ட அல்லது பாடசாலை மாணவன் கூட தூற்று அளவுக்கு நபிகளாரின் பண்பாடுகள் கேல்விக்குள்ளாக்கப்படிகின்றன இந்த நபிவழி பேனப்படுவதில்லை. 
இதுபோன்ற இன்னும் சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

எவ்வாறு மத்ஹபை பின்பற்றும் குழுக்கள் இன்று வரை அதனை அப்படியே பின்பற்றிவருகிறார்களோ அவ்வாறே இந்த ஸலபிகளும், தௌஹீத் ஜமாஆத்தும் ஷிர்க், பித்அத் போன்றவற்றை எதிர்த்தல் அதனூடாக மாத்திரம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் தூய ஸ்லாத்தை பின்பற்றல் என்ற விடயத்தில் இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாரு தௌஹீத் பேசும் தௌஹீத் ஜமாஆத் இன்று 10க்கும் மேற்பட பல பிரிவுகளாக பிரிந்துள்ளது பாரிய விமர்சனத்துக்குறியது. இவர்களது இந்த பிரிவுகளுக்கு இவர்களது கடும்போக்கும், பண்பாடுகள் பற்றிய பயிற்சி இன்மையும் முக்கிய காரணங்களாக குறிப்பிட முடியும்.