சமூக மாற்றத்தை நோக்கி...

Sunday, December 25, 2011

எது இஹ்வான்களின் காலம் அது இஸ்லாத்தின் காலம்

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் எதற்கென்றால் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள்இ இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும், கொள்கைகளையும், இஸங்களையும், வாதங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே. (9:33)

இஸ்லாத்தை உலக மக்களின் வாழ்க்கை நெறியாக, வாழும் கொள்கையாக உலகில் தலைநிமிர்த்திவைத்துப் பார்க்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் ஆசையை உலகில் நிலைநிறுத்த வந்த இறுதித்தூதர் ரஸூல் (ஸல்) அவர்கள் அந்த ஆசையை தனது வாழ்நாளில் உலகில் நிலைநிறுத்திக் காட்டிச் சென்றார்கள். அதன் பின்னர் அந்த நெறி உலகத் தளத்தில் இருந்து படிப்படியாக விடைபெறத்தொடங்கி 1924இல் பெயரலவில் இருந்த இஸ்லாமிய ஆட்சி (கிலாபத்) அல்லாஹ்வின் எதிரியாகப் பார்க்கப்படும் கமால் அதாதுர்க்கினால் தூக்கி எரியப்பட்டு சடவாதம், மதச்சார்பின்மை என்பன நீதி சொல்லவும், வழிகாட்டவும் ஏற்ற மார்க்கமாக ஆக்கப்பட்டு பின்பற்றப்படலாயிற்று.

இந்த நிலையில் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் தோற்றம் பெற்று இந்த மிகப்பெரிய ஷிர்க்கில் இருந்தும், இழிநிலையில் இருந்து சமூகத்தை கரைசேர்க்க முற்பட்டனர். அந்த முயற்சிகளினூடாக 1928இல் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்) அவர்களினால் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1926 களில் மௌலானா இல்லியாஸ் (ரஹ்) அவர்களால் மத்ரஸா மாணவர்களைக் கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அது நாளடைவில் தப்லீஹ் ஜமாஅத்ஆக மாறியது. அதனைத் தொடர்ந்து மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களினால் 1941இல் ஜமாஅதே இஸ்லாமி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு பல ஜமாஆத்கள் தோன்றின.

இந்த அமைப்புக்களில் சில இஸ்லாத்தினை அடிப்படையாகவைத்து நவீன காலத்துக்கு ஏற்ப தமது நாட்டு, சமூக சூழ்நிலைகளைக் கருத்திட்கொண்டு செயற்திட்டங்களை அமைத்து செயற்பட ஆரம்பித்தன. இந்த ஒழுங்கில் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூனின் மற்ற அமைப்புக்களில் இல்லாத சிறந்த பயிற்றுவிப்புக்களாளும் தஃவா அனுகுமுறைகளாளும் இஸ்லாமிய சமூகத்தில் பாரிய செல்வாக்குப் பெறத்தொடங்கியது. அதனது தாக்கம் இன்றைய உலகின் அனைத்து நாடுகளிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

அத்துடன் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைச் சுற்றி பாரிய அறிஞர்கள் வட்டம் காணப்படுவதும், அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தமது உயிர்களையும், உடமைகளையும் கொடுத்து செய்த தியாகங்களினால் அல்லாஹ்வின் அருளைப் பெற்று உலகில் தவிர்க்க முடியாத சக்கியாக வளர்ந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் அஷ்ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களது அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பும் அந்த இயக்கத்தை சேர்ந்த போரளிகள் அறிஞர்கள் போன்றோர் இன்றைய உலகில் அவர்களது செயற்பாடுகளில் பாரிய அளவில் வெற்றி கண்டு வருகின்றதை நாம் மிகத்தளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் அத்தகைய வெற்றிகளை, சர்வதேச அங்கீகாரத்தை, சர்வதேச தரத்தை அடையத் தவறிய இயக்கங்கள் (குறிப்பாக மிகச் சில ஸலபிகள் மற்றும் இலங்கை இந்திய தௌஹீத் இயக்கங்கள்) அந்த குரோதத்தால் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்களை தமது மனக்கவளைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சிறிய விடயங்களை பூதாகரமாகக் காட்டியூம், கருத்து வேறுபாடுகளுக்குறிய விடயங்களில் தமது கருத்தை மாத்திரம் சரி கண்டு இஹ்வான்களது கருத்துக்களை வழிகேடாகக் காட்டியும், அபாண்டங்களை அவர்கள் மீது சுமத்தியும் அவர்களை முஸ்லிம்களிடம் இருந்து பிரித்துவிடுவதற்கான முயற்சிகளை இயக்கமாக சேர்ந்த செயற்படுத்தி வருகின்றனர்.

இதற்குக் காரணம் என்ன?

இன்று இஹ்வான்கள் கிட்டத்தட்ட 100 நாடுகளில் உத்தயோக பூர்வமாக செயற்படுகின்றனர். அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகமான நாடுகளில் அவர்கள் தவிர்க்க முடியத சக்கியாக மேற்குலகு பயப்படக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்ந்து வந்துள்ளதுடன் கடந்த 80 வருடங்களாக அவர்களை பலமுனைகளிலும் அடக்க முற்பட்ட நாடுகள் தோழ்வியையே தழுவியூள்ளன. இதனைத்தான் சிரியாவின் பஷர் அல் அஸத் 29.10.2011 அன்று ஆற்றிய உரையில் ‘நாம் இஹ்வானுல் முஸ்லிமூனுடன் ஐம்பதுகளில் இருந்து போராடுகிறோம். தொடர்ந்தும் போராடுவேம்’ எனக் குறிப்பிடடார். இது ஒரு நாடு மாத்திரமே.

இத்தகைய ஒரு வளர்ச்சியை இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் 1800களில் ஸலபிய சிந்தனையை ஆரம்பித்தது முதல் இன்று 2 நூற்றாண்டுகள் தான்டியூம் ஸலபிசம் அல்லது தௌஹீத்வாதம் அடைந்து கொள்ளவில்லை என்கின்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகும். இத்தகைய வயர்ச்சி அடையாமைக்குக் காரணம் இவர்கள் இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் செயற்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமையும் போதிய இஸ்லாமிய அறிவின்மையுமாகும். இதனை இவர்கள் திறுத்திக் கொள்வதைவிட்டு இஹ்வான்களின் வளர்ச்சியில் எறிச்சல் படுவதில் பயனில்லை.

அடுத்து இன்று உலகில் அனைவராலும் பேசப்படும் ஒரு பேச்சுப் பொருளாக இஹ்வானுல் முஸ்லிமூன் என்கின்ற வசனம் செல்வாக்குப் பெற்றுள்ளது. இதுவரை காலமும் இஹ்வான்களை மேற்கும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் அரசுகளும் பயங்கரவாதிகளாகவூம்இ தீவிர வாதிகளாகவூம் சித்தரித்து வந்தது. ஆனால் இன்று இஹ்வான்களின் செயற்பாடுகள் வெளியாகத் ஆரம்பித்ததுடன் அவர்களுக்கு அந்த நாட்டு மக்களிடம் காணப்படும் ஆதரவையும் உறவுகளையும் காணும் மேற்கு சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகி இறுகிப்போயூள்ளது. அவர்களிடம் காணப்படும் மனிதாபிமானம், சமூக நோக்குஇ சீரிய சிந்தனை, அனைவரையூம் அரவனைக்கும் இளகிய போக்கு இன்று உலகை சிந்திக்க வைத்துள்ளது.

இஸ்லாம் குறித்து மேற்கிடமும், மதச்சார்பற்றவர்களிடமும் காணப்பட்ட பிழையாக கருத்துக்ளை அழிப்பதில் இஹ்வான்கள் மிகக் கவனமாக செயற்பட்டார்கள். ஐரோப்பாவை இஸ்லாத்தினுல் இழுத்து செல்லும் பணியை அவர்கள் கச்சிதமாகச் செய்துவருவதை அவர்கள் அவதானிக்கிறார்கள். எனவே பேசுகிறார்கள். இது வேதனைப்படக் கூடிய ஒன்றல்ல முஸ்லிம்கள் சந்தோசப்பட வேண்டும், துஆ செய்ய வேண்டும். ஆனால் தௌஹீத்வாதம் அதிர்கிறது. 



அதேபோன்று இன்று உலகில் எங்கு சென்றாலும் இஹ்வானிய அறிஞர்களே அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றனர். ஸலபி சிந்தனை செல்வாக்குள் நாடுகளில் கூட இஹ்வான்களே ஆக்கிரமித்துள்ளனர், மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். (மிகச் சொற்ப உதாரணங்களாக சவூதியில் முஹம்;மத் குதுப், கட்டாரில் கர்லாவி, குவைத்தில் நாதின் நூரி…..) இதற்கு அவர்களிடம் இஹ்வானுல் முஸ்லிமூன் வளர்த்துவிட் ஆலுமையும்இ அவர்கள் அங்கு பெற்ற இஸ்லாம் குறித்தான விரிவான பார்வையூம் காரணமாகக் காணப்படுகின்றது. எனவே அதற்காக ஆவேசப்படுவது மடமையாகும். அதற்கு அவர்கள் என்தான் செய்ய இஸ்லாத்தைப் படிக்கிறார்கள் அதன்படி செயற்படுகிறார்கள் அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு சமீபமாக இருக்கிறது.

முஸ்லிம் உலகுக்கு எதிரான செயற்பாடுகளின்போது அதனை தடுப்பதற்கான அவர்களது வித்தியாசமான  போராட்டங்களை அவர்கள் ஆரம்பம் முதல் மேற்கொண்டு வந்தார்கள். குறிப்பாக 1940 பின் எகிப்தில் இருந்த மன்னர் பாரூக்குக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியில் அவர்கள் பங்கு கொண்டார்கள். 1948களில் இருந்து பலஸ்தீனில் யூதர்களின் ஆக்கிரமிப்புக்களை தடுப்பதில் தீவிரமாக செயற்பட்டார்கள்இ அவர்களது ஹமாஸ் எனகிற ஆமைப்பு இன்றுவரை தனது ஆன்மீக பலத்தால் மாத்திரம் இரண்டு வல்லரசுகளுடன் போரிட்டு பாரிய வெற்றிகளை கண்டு வருகின்றது. அன்மையில் அமெரிக்காவின் பிரதிநிததி ஒருவர் கூறும் போது ‘இஸ்ரேல் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுகின்றதுஇ அதனைக் காத்துக்கொள்வத ஸ்ரேலின் பொருப்பாகும்’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு வல்லரசுகளே கைவிடும் அளவூக்கு அவர்களது கை ஓங்கியூள்ளதைக் காட்டுகின்றது.

அதேபோன்று ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியனிடம் இருந்த மீட்பதில் இஹ்வான்கள் தமது ஒரு போராட்ட இயக்கத்தையே நிறுவி செயற்பட்டு ஆப்பானிஸ்தானின் விடுதலைக்கு பங்காற்றினார்கள். அதேபோன்று ஆப்கானிஸ்தான் போராட்டக் குழுக்களுக்கிடையில் முறுகள் நிலை ஏற்பட்டபோது அதனை தீர்ப்பதில் அவர்கள் மும்முறமாகச் செயற்பட்டார்கள்.

அவ்வாறே ஈராக்கை நேட்டோ படைகள் தாக்கி கைப்பற்றிய பின்னர், ஈராக்கில் பல சீரழிவூகளை அவர்கள் மேற்கொண்டார்கள். அதன்போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவூம்இ ஈராக்கை மீட்பதற்காகவூம் அவர்கள் அங்கு ஜிஹாதை மேற்கொண்டார்கள். அத்துடன் செச்னியாவில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புககு எதிராக அந்த நாட்டு ஜனாதிபதியுடைய படைகளுடன் இனைந்து இஹ்வான்கள் ஜிஹாதில் இன்றும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இத்தகைய இவர்களின் உலகலாவிய செயற்பாடுகளால் அவர்கள் உலக மக்களால் தவிரக்க முடியாத சக்தியாக பலம்பெற்று வளர்ந்துள்ளார்கள். இத்தனைய செயற்பாடுகளை அவர்கள் செய்ததற்குக் காரணம் இஸ்லாத்தின் போதனைகயை இஹ்வான்கள் சரியாக உள்வாங்கி இருந்தமையாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் “யார் முஸ்லிம்களின் விடயங்களில் கரிசனைகாட்டவில்லையே அவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறியதற்கு இனங்க மற்றும் “இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்த கொள்ளுங்கங்” என்ற அல்குர்ஆனிய வாசனத்துக்கும் இணங்க அவர்கள் இஸ்லாத்தை கூறுபோட்டு நோக்காது அல்லது ஸலபிகளைப்போன்று தமது கொள்கைகளுக்கு இயைபானவற்றை மட்டும் கூடுதலாகப் பேசதல், செயற்படுத்தல் என்றில்லாமல் இஸ்லாத்தை அவர்கள் பூரணமான ஏற்று செயற்பட பழக்கப்பட்டிருந்தமையாகும்.

இவை அனைத்தையும்விடவும் ஸலபிசம் இன்று அதிகம் மனவியாதிக்குள்ளாக்கப்பட்டிருக்கும் விடயம், அரபுகளின் எழுச்சியில் இஹ்வான்களின் சிந்தனைத் தாக்கமும், அவர்களின் பங்களிப்புக்களாகும்.

இதனை எடுத்து நோக்கும் போது நவீன் அரபு எழுச்சியில் அவர்களின் பங்களிப்பு மறுக்க, தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் இன்று புரட்சி ஏற்பட்ட நாடுகளில் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அத்தொடரில் அந்நாடுகளில் காணப்பட்ட தீய ஆட்சியாளர்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டும் ஓடவேண்டிய நிலை எற்பட்டு சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். அவ்வாறு அந்த தலைவர்களின் வெளியேற்றங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில் ஏற்பட்ட தேர்தல்களில் இஹ்வான்களின் கட்சிகள் மக்களின் கூடுகலான ஆதரவுகளைப் பெற்று ஆட்சிஅமைக்கக் கூடிய நிலைக்கு வந்துள்ளன.

அத்துடன் இத்தகைய எழுச்சிகளுக்குப்பயந்த பல நாடுகள் முன்யோசனையாக ‘வெள்ளம் வருமுன் அனைகட்டல்’ என்பதற்கினங்க அரசியலில் பல மாற்றங்களைச் செய்துவருவதுடன் குறிப்பாக இஹ்வான்களுக்கு கூடிய பங்களிப்புக்களை வழங்கியூள்ளனர். இதன் தொடரில் மொரோக்கேவில் நடைபெற்ற தேர்தலில் இஹ்வான்கள் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளனர். குவைத் போன்ற நாடுகளில் பாரிய அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவையும் இஹ்வானிய எழுச்சியின் மூலம் இஸ்லாம் அடைந்த வெற்றியின்  பிரதிபளிப்புக்களே. ஆனால் இவற்றை இந்த ஸலபிசம் கண்டுகொள்வதில்லை என்பது தான் ஆச்சரியம்.



இன்று முஸ்லிம் நாடுகளில் நடைபெற்றுவரும் சீர்திருத்தப் புரட்சிகளில் இஹ்வான்களே முன்னனியில் இருக்கின்றனர். அந்த புரட்சிகளை வழிநாடாத்திச் செல்வதில் அவர்களுது வழிகாட்டல்கள் மிகப் பொருத்தமானதாக மக்கள் காண்கின்றனர். இஹ்வானிய அறிஞர்கள் குறிப்பாக அல்லாமா யூசுப் அல் கர்லாவி போன்றோறது வழிகாட்டல் உந்து சக்தி அவர்களது பத்வாக்கள் இன்று மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுக் காணப்படுகின்றது. இதுவரை புரட்சி வெற்றி பெற்ற மூன்று நாடுகளிலும் இஹ்வான்கள் வெற்றி உயிரூட்டியவர்களாக அந்நாட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். இதனால் தான் தியூனீசியாவில் இஹ்வான்கள் ஆட்சிக்கு வந்தனர். அவ்வாறே எகிப்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களில் இஹ்வான்கள் மிகவூம் ஆதரவுகளைப் பெற்றுள்ளனர். அங்கு அரசியல் இஸ்லாத்ததில் இல்லை என்று கூறும் அல்லது அரசியலுக்கான இத்தகைய பிரயத்தனங்கள் தேவையில்லை என்று கூச்சலிடும் ஸலபிசம் கூட தமது கொள்கைகளை ஒருபுறம் வைத்துவிட்டு அரசியலில் இரங்கி செயற்படுகின்றனர். புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் முதல் குத்பாக்களுக்குக் கூட கர்லாவியே அழைக்கப்பட்டார்.

அத்துடன் இது ஸலபிச நாடு என்று கத்தும் அவர்கள் தமது நாடுகளில் காணப்படும் அராஜகங்களை கண்டுகொள்ளாதவர்களாகவே இருந்துவந்தனர். இதனால் அவர்களது சவூதி, குவைத்… போன்ற நாடுகளில் கூட இப்போது புரட்சி வெடிக்கும் நிலை தோன்றியூள்ளது. இந்த புரட்சிகளுக்கு நாட்டு மக்கள் அரசையூம் மீரி ஆதரிக்கும் நிலை தோன்றியூள்ளது. இந்த நிலையில் தமது இருப்புக்கும் பாதிப்பு ஏற்படப்போகின்றது என்று கண்ட அரசுக்கு வாழ்பிடிக்கும் ஸலபிசம் மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக சம்பந்தமில்லத பத்வாக்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் இஹ்வான்களை மோசமானவர்களாக சித்தரித்துக் காட்டுவதற்காக இஹ்வான்களின் சிந்தனைகளை திரித்துக் கூறியும் இஹ்வான்களின் சர்வதேச அறிஞர்கள் மீது அபாண்டங்களைச் சுமத்தியும் வருவது நகைப்புக்கிடமானது. இது இன்றைய உலகில் எடுபடாத அவர்களை இன்னும் தாழ்த்திக் கொள்ளும் செயற்பாடுகளாகும்.

அதிலும் விஷேடம் அரபு நாட்டு ஸலபிசத்தின் உலரல்களை இந்திய, இலங்கை நாட்டு குறுட்டு தௌஹீத்வாதமும் சிரமேற்கொண்டு பரப்பிவருவதாகும் இது இஸ்லாத்துக்கு எதிரான ஸியோனிசத்தின் உத்தியகளில் ஒன்றாகும். இது தவிரவூம் அவர்கள் எங்கு செயற்பட்ட போதும் ஒரு குடையின் கீழ் செயற்படுகிறார்கள். ஆனால் ஸலபிசமும் தௌஹீத்வாமும் இன்று பல பிரிவூகளாகப் பிரந்த தமக்குள்ளால் உள்ள பிரச்சினைகளால முட்டிமோதிக் கொண்டுள்ளனர். எனவே தமது இந்த அறிவீனமான விடயங்களை மறைப்பதற்காகவூம் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றர் எனலாம்.

இதில் உள்ள பிரச்சினை எத்தகைய மாற்றங்களும் தங்களால் தான் வரவேண்டும். நாம் தான் உலகில் பேசப்படவேண்டும் இதில் யாரும் எம்மை முந்திவிடக்கூடாது என்கிற மனனோயகும். இது அன்று நபிகளாரை ஏற்காத யூதர்களிடம் இருந்த மனப்பாங்காகும் இதனால் தான அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மையில் நபி என்று அறிந்து அவர்களை ஏற்கவிடாமல் செய்தது. எனவே இந்த மனநிலையில் இருந்த நீங்குமாறும் இஸ்லாமி எழுச்சிக்கு தங்களால் முடியுமான பங்களிப்புக்களை வழங்குமாறும் அநியாயமாக முட்டுகட்டைகளை இடுவதை விட்டும் தவிர்ந்திருக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸலபிசத்தாலும் தௌஹீத்வாதத்தாலும் முஸ்லிம் சமூகத்தில் காத்திரமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை இஹ்வான்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அது குறித்து அவர்களிடம் மட்டரகமான மனப்பாங்கு இல்லை. ஒரு விடயம் குறித்தது நீங்கள் கருத்துக் கூறும் போது பல இடங்களில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இன்றும் இந்நிலை காணப்படுகின்றது. ஆனால் நீங்கள் கூறும் கருத்து உண்மையில் குர்ஆனின் கருத்தாக இருந்;தாலும் அதனை சாதாரன மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை காரணம் அது அவர்களுக்கு புதியது. புதியது என்பதற்காக மறுப்பது அறிவீனத்தின் அடையாளமாகும். எனவே மாற்றுக் காருத்துக்களை ஆராய்ந்த அந்த மாற்றுக் கருத்துக்களுக்க சந்தர்ப்பம் இருக்கும் போது அதனை ஒரு வருக்கு சொல்வதற்கான அனுமதியை நாம் வழங்க வேண்டும். என்ற விடயத்தை சிந்தனையில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் ஒரு எச்சரிக்கையையூம் செல்லிவைக்கிறேன். அது தான் இன்றைய இஸ்லாமிய எழுச்சியை தடுத்து நிறுத்துவதில் மேற்கத்தேயமும் ஸியோநிசமும் சுகபோகத்தில் திலைத்திருக்கும் அரபுநாட்டு தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒருமித்து செயற்படுகிறார்களோ. அதே போன்று அல்லது அதைவிடவூம் ஒரு படி மேல் சென்று இன்று ஷீயாக்களின் தலைமைகள் இஹ்வான்களுக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர் என்பதனை நாம் நிதர்சனமாகக் கண்டு கொண்டிருக்கின்றௌம். அதற்கு சிரிய தலைவர் அஸதின் நான் மேற்குறிப்பிட்ட கூற்றும் மிகச் சிறந்த உதாரணமாகும்.



இந்த கொந்தளிப்பான நிலையில் ஈரான்இ ஈராக் போன்ற ஷீயாக்களை பெறும் பான்மையகக் கொண்ட நாடுகளும் ஹிஸ்புல்லாஹ் போன்ற தீவிர ஷீயா இயக்கங்களும் சேர்ந்து இந்த புரட்சியை நசுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இலங்கையில் வெளியாகும் ‘தூது’ கடைசி சஞ்சிகையில் இடம் பெற்ற கட்டுரை ஒன்றில் ஷீயாக்களின் ஆன்மீகத் தலைவர் அவர்கள் தமது ஒரு செய்தியில் அரபு நாட்டு புரட்சிகள் குறித்தம் அந்த தலைவர்கள் விரட்டப்பட வேண்டும் என்பது குறித்தும் சார்பான் கருததை சொல்லிக் கொண்டவரும் அவர் சிரியா குறித்து எத்தகைய கருத்துக்களையூம் கூறாது விட்டுள்ளார். இது எதனைக் குறிக்கின்றது அவர்கள் அனைவரும் அலவிய தீவிர ஷீயாவான அஸத் எவ்வளவூ மோசமானவனாக இருந்தாலும் அவன் ஷீயா என்பதால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.



இதே கொள்கையை இன்றைய ஸலபிசமும் தௌஹீத்வாதமும் கையாண்டு வருவதை காணமுடிகின்றது. இது சியோனிசத்துக்கும் ஷீயாக்களுக்கும் சார்பான் செயற்பாடாகும் அது அவர்களுடைய செயற்பாடுகளுக்கு சாதகமான தாகும் எனவே கடுமையான ஷீயாக்களை எதிர்க்கும் இவர்கள் இந்த விடயத்தில் ஷீயாக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியூள்ளது. ஷீயாக்களும், சியோனிசமும் இஹ்வான்களின் திட்டமிட்ட செயற்பாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்ட வரும் இந்நிலையில் ஸலபிவத்தினதும் தௌஹீத்வாதத்தினதும் இச் செயற்பாடுகள் அவர்களுக்கு ஆதரவையூம் பலத்தையூம் கொடுக்கும் முயற்சியாகக் காண்கிறௌன். இந்த இஸ்லாமிய விரோதச் செயலை, அகீதாவூக்கு வேட்டுவைக்கும் இந்த செயற்பாடுகளை அவர்கள் தெரியாமல்தான் செய்வதாக உணர்கிறௌன். எனவே அவசரமா சிந்தித்து செயற்படுமாறும் உலக இயக்கத்தை சரியகப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறும் கோட்கிறேன்.

இல்லை இதனையூம் தெரிந்த கொண்டுதான் செயவதாக இருந்தால் அது இஸ்லாத்துக்கு வேட்டுவைக்கும் செயற்பாடகும். இது அவர்களின் சுயநலத்தை மிகத் தெளிவாக தௌஹீவாக காட்டும் செற்பாடகும். தெளிவான இஸ்லாமிய அறிவு இல்லாததால் ஏற்பட்ட ஒரு உளவியல் வியாதியாகும்.

மிகச் சுருக்கமாகச் சொன்னால் இஹ்வான்களின் வளர்ச்சியாள் ஸலபிசம் அதிருகிறது எனலாம்.

அதிர வேண்டிய அவசியமே இல்லை அவர்கள் உங்களை என்றும் சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் அவர்கள் மனித சமூகம் அனைத்தையூம் அரவனைத்துச் செயற்படும் நெகிழ்வூத் தன்மை கொண்ட இஸ்லாமியத்தால் போசிக்கப்பட்ட இஸ்லாமியர்கள்.

சுக்ரி நஸ்லியா
றம்புக்கனை.
25.12.2011

No comments:

Post a Comment